Monday, March 28, 2011

மேகங்கள்

வான வீதியில்
அழகு ஊர்வலங்கள்
எண்ணங்களின் பிரதிபலிப்பாய்
கண்ணில் படும் மாயங்கள் ........
காற்றின் திசையில் தவழும்
வெண்புகை பந்து ஒன்று
நம்முடன் நகர்வதாய் ஒரு மாயை ...
பஞ்சுப் பொதியொன்று
நிலா மகளுடன் கண்ணாமூச்சி
ஆடுவதாய் ஒரு எண்ணம்....
வெட்கத்தை ஆடையென அணிந்த
மங்கையைப் போல்
சூரியப் பந்தினை
தன்னுள் மறைத்துக் கொண்டு
உலகத்தின் கண்களை
கட்டி விட்டதைப் போல்
குறும்புச் சிரிப்பு சிரித்து
மென்மையாய் மனதை தழுவிச் செல்லும்
மேகக் கூட்டங்கள்!!!
http://eluthu.com/kavithai/36947.html
http://www.eegarai.net/t49242-topic 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...