Monday, March 28, 2011

மழை !!!

மேகத் தாய் பிரசவித்த
குழந்தை- மழை!!!
வானின்று கீழிறங்கி
பூமி மகளின் மடிதனில்
தவழ்ந்திட்ட மழை மழலை...
வாரி அணைத்திட்டாள்
பூமாதேவி தன் கிள்ளை என!!
தன்னுள் நிறைத்திட்டாள்
உள்ளம் மகிழ்ந்தாள்
உற்சாகம் பீறிட்டது-
மண் வாசனை மணம் பரப்பியது!
புல்வெளியும் சிலிர்த்தது-
தன் மீது துளிர்த்தது அமிர்தமென...
காக்கையும் குருவியும் சிறகடித்து
தலைநிமிர்ந்து கம்பீரமாய்
உற்சாக வரவேற்பு அளித்தன ....
எங்கோ இருந்து தவளை கூட்டமும்
மழைக் கச்சேரி பாட வந்து விட்டன...
மனிதர்களே....
நீங்களும் வாருங்கள்...
மழைக் கிள்ளையின்
அழகை ரசிக்க!!!
அந்த மகிழ்ச்சியில்
உலகை மறக்க!!!
http://eluthu.com/kavithai/36946.html
http://www.eegarai.net/t48741-topic 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...