Wednesday, January 30, 2013

படமும் வரிகளும்


 அம்மா !!! - உன்
 இறகுக் குடையின் கீழ்
 இன்பமாய் சுகம் காண்கிறோம்
 உன் அன்பின் கதகதப்பில் !!!



நீலவானின்று மேகத் தாரகை
பூமித் தாயின் மடிதனில்
ஓடி விளையாடுகிறாளோ ?
அவள்தம் பாதம் பட்டதும்
தாயும் பூரித்து நிற்கிறாளே !!!


முயற்சியின் துணைகொண்டு
அடியெடுத்து வைக்கும்
பாதையில் - இறைவனும்
விளக்கொளியாய் !!!
வெற்றிக் கதவுகளும்
தொட்டு விடும்
தொலைவில் தான் !!!

 http://tamilnanbargal.com/tamil-kavithaigal/வெற்றிக் கதவு
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/மேகத்தாரகை
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/தாய்-5 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...