Tuesday, January 22, 2013

அழகான காதல்

நிலவையும் நட்சத்திரங்களையும்
இரசிக்க நீங்கள் தேடும்
பொழுதென்னவோ - கருமை
பூசிய இரவு !!!

பயபக்தியுடன் வணங்கி -
நாமங்களை உருப்போட்டு
நம்பிக்கை வைக்கும் தெய்வத்திற்கு
நீங்கள் கொடுத்த நிறமென்னவோ - கருப்பு !!!

உலகை உனக்கு
அடையாளம் காட்டும் - உன்
கண்ணின் விழிகள் இரண்டின்
நிறமும் கருப்பன்றி வேறென்ன ??

உங்கள் மூதாததையராய்
நீங்கள் எண்ணி
அன்றாடம் அன்னமிடும்
காகத்தின் நிறமென்ன ??

நாம் ஜனித்த கருவறையில்
அன்று நாம் இருந்தது
காரிருளில் தானென்பதை
மறந்திடலாமோ ?

நாளை நமக்காகக்
காத்திருக்கும் கல்லறையின்
அடையாளமும் கருமையன்றி
வேறெதுவோ ??

ஒருவரது அழகை நிர்ணயிப்பது
இளஞ்சிவப்பும் கோதுமை  நிறமும் தானெனில்
அவற்றின் அடிப்படை நிறமென்ன ??
அறிவீரோ ? - கருப்பு தான் !!!

ஆராதனைக்கும் காதலுக்கும்
உரியவர்  சிவப்பானவர் மட்டுமே!!! - இக்
கரும்புள்ளியை முதலில்
மனதின்று அகற்றுங்கள் !!!

அழகான காதல் தங்கள்
மனக்கதவை தட்டிக்கொண்டு
உங்கள் வரவுக்காய்
காத்து நிற்கிறது !!!


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...