Monday, January 28, 2013

நாடி கவிதை போட்டி 3



உன் அலைபாயும் கூந்தல்-
மேகக் கூட்டமென
நிலவும் நட்சத்திரங்களும்
தஞ்சம் புகுந்து விட்டனவோ ??
உன் விரல்களின் அரவணைப்பில்
அவை குளிர் காய்கின்றனவோ ??


கார்மேகமென உன் கூந்தலும்
காற்றின் இசைக்கேற்ப
அலைபாய - கரங்களிரண்டும்
மேகங்களை தாங்கும்
வான் போல் அணைத்து
நிற்க - விழியிரண்டும்
வெட்டி வைத்த
நிலவுத் துண்டங்களாய்
ஒளி பரப்ப - வான் தேவதை
பூமியில் வந்திறங்கி
அமர்ந்திருப்பது போன்றொரு
ஒயில் !!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...