Sunday, January 20, 2013

இன்றைய நிலை







பருவ மழையை எதிர்பார்த்து
ரெண்டு கண்ணும் தான்
பூத்துப் போச்சு !!!
விளை நிலமும் தான்
இங்கு  பயனில்லாம
தரிசா தான் ஆச்சு !!!
புல்லைத் தின்ன மாடும் கண்ணும்
இன்னிக்கி பேப்பரும் போஸ்டரும்
தின்னும் நிலை வந்தாச்சு !!!
உலகுக்கே சோறு போடும்
விவசாய மவராசக்களும்
பட்டினியால துவண்டாச்சு !!!
இலவசங்கள நம்பி
மக்களும் தான்
வாயப் பொளந்து நின்னாச்சு  !!!
இது எத்தனை காலத்துக்குனு
சிந்திச்சு - இப்பவாச்சும்
கண்ணத் தொறந்துக்கிட்டா
வாழ்க்கை நமக்காச்சு !!!
அல்லது கொஞ்ச வருஷத்துல
மனுஷ இனமே இங்க
மண்ணோட மண்ணாச்சு !!!

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...