Saturday, February 9, 2013

உலகின் உண்மை முகம் - கவி விசை உலக சாதனை நூல்




கவி விசை - உலக சாதனைக்காக 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இருந்து உருவாக்கிய நூல்

உலகம் - தன் வாய்க்கு கிட்டியதெல்லாம்
அவலென மென்றிடும் !!!
அது நன்மை தீமை பாகுபாடு
அறிந்ததுமில்லை - அதை
அறியும் எண்ணம் என்றும்
அதற்கு இருந்ததும் இல்லை !!!

முகத்திற்கு முன்
ஆயிரமாயிரம் துதிகள் ......
முதுகுக்குப் பின்னோ
விழுந்திடும் மிதியடிகள் !!!
ஆக  -  வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
ஏற்க வேண்டும் சொல்லடிகள் !!!

சபைதனில் அறிந்ததை
வெளிப்படுத்தினால் - தற்பெருமை என
தப்புக் கணக்கிடும் !!!
மௌனமாய் இருந்தாலோ
ஏளனப் பேச்சில்
நம்மை ஏய்த்திடும் !!!

இலட்சியங்கள் பல தோன்றி
கனவென வீழ்வதும்
கனவுகள் பல தோன்றி
நிலையாக வாழ்வதும்
மானுடர்களின் -
உலக வாழ்வில் தாம் !!!

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம்  வெளியிட்விவிசை நூலில் பிசுமாது.

1 comment :

  1. தமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :

    தமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :
    சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் புற நானூறு நூல் போன்று இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்தியரின் வாழ்க்கைமுறையை விளக்கும் நூல் ஒன்றினை கீதம் பப்ளிகேசன்ஸ் மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல சிறப்பு விருந்தினர் ஒருவரால் வெளியிட உள்ளோம். இந்த நூலில் ஆசிரியராக இணைய தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு

    more details : http://www.vahai.myewebsite.com/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...