Friday, February 15, 2013

இதிலென்ன பொறாமை ??



இறைவன் போடும் முடிச்சுகள்
இணைந்திடும் இதயங்கள்
இன்பமாய் நடந்தேறும் திருமணங்கள்
இங்குமேன் தலைதூக்க வேண்டும் பொறாமைகள் ???

இறைவனுக்கு காலம் காலமாய்
இறைக்கிறாய் காணிக்கை - நானோ
இன்றொரு நாள் வைத்தேன் விளக்கை
இன்றே கிடைத்ததெனக்கு புது வாழ்க்கை !!!

இளையாள் எனக்கு கிடைத்தது -
இல்வாழ்க்கை !! மூத்தவள் உனக்கேன்
இன்னும் இல்லை - மனம் போல்
இன்ப மணவாழ்க்கை ??

இப்படித்தான் சில
இரக்கமற்ற இதயங்கள்
இயல்பாய் நம் நெஞ்சில்
இறக்கிச் செல்லும் இடிகள் !!

இதிலென்ன இலாபம்
இந்நெஞ்சங்களுக்கு ???
இவர்களும் பெண் தானென்று
இதயத்தில் தோன்றுவதெப்போது ???

இவ்வுலகில் பெண்ணே பெண்ணுக்கு எதிரி -
இந்த இழி பழி தான்
இனி மாறும் காலமும் தான் எப்போது ??
இன்ப நல்லுறவும் தான் பிறப்பதெப்போது ??

http://www.muthukamalam.com/verse/p1130.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...