Thursday, February 28, 2013

மாயமான 2012

picture

மாயமாகிப் போனது 2012
ஆம் ! - காலத்தின் ஓட்டத்தில்
மாயமாகித் தான் போனது !!!
மாயமாக்கித் தான் போனது -
ஓர் யுவதியின் வாழ்வு தனையும் !!!
மருத்துவம் பயின்று வந்த மலர்
மரித்துத் தான் போயிற்று -
மனதினில் ஈவிரக்கமில்லா
சில ஓநாய்களின்
கொடூர வெறித் தாக்குதலால் !!!
எத்தனை  இலட்சியக் கனவுகள்
அன்று மரித்துப் போயினவோ ?
மனித உருவில் உலவும்
சில மாக்களால் - அந்த வனிதையின்
பெற்றோரின் எத்தனை எத்தனை
ஆசைக்கனவுகள் சுக்கல் சுக்கலாகிப்
போயினவோ ?? - காலத்தின்
ஓட்டம் தனில் தேசத்தையும்
மனித இதயங்களையும்
கொந்தளிக்கச் செய்த சம்பவமும்
மாயமாகித் தான் போனது !!!
இந்நிலையில் 2012
மாயமாகிப் போனதில்
என்ன ஆச்சரியம் ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=85 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...