Tuesday, June 25, 2013

நினைவுகள் !!!



ஏடெடுத்து எழுதி வைக்க
எத்துனையோ நினைவுகளுண்டு !!!
நினைவுகளை எல்லாம்
வண்ண மலர்ச்சரமாக்கி
அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்
இலயித்திருக்க பொழுதேது ???


காற்றினில் கலந்து வந்து
நாசியில் படிந்திடும் - மலரின்
நறுமணம் போல்
நினைவலைகளில் கலந்து வந்து
நெஞ்சமதில் இனித்திடும்
இனிய  இன்ப நினைவுகள் !!!


கதிரவனின் ஒளி பட்டு
மெல்ல விலகி   ஓடும்
பனித்திரை என - உள்ளமதில்
படிந்த  துன்பச் சுவடுகளை
துடைத்தெறியும் பேரலையென
மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!


மலரும்  நினைவுகளால்
மனதினில் உருவாகுமோர்
மகிழ்ச்சி ஊற்று !  - அது
இதழின் ஓரத்தில்
கொண்டு  வருமே
அழகானதோர்  புன்னகை கீற்று !!!


நினைவுகள் - அவை தாம்
ஆகுமே உள்ளக் காயங்கட்கு
நல்லதோர் அருமருந்தாய் !!
அவையும் தான் வருடுமே  
துடித்த தவித்த உள்ளங்களை
மென்மையான மயிலிறகாய் !!!


பி.தமிழ்முகில் நீலமேகம்

http://www.vallamai.com/?p=36347 

18 comments :

  1. நினைவுகள் அதனதன் தன்மை கொண்டு அருமருந்தாகவும், கிழிக்கும் கத்தியாகவும்....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  2. ரசிக்க வைக்கும் நினைவுகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்கள் மலரும் நினைவுகள் என் நினைவுகளையும் மலர வைத்தன. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. அழகான தருணங்கள்
    அசைபோட்ட கவிஅருமை!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  5. மலரும் நினைவுகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !

      Delete
  7. மலரும் நினைவுகளால்
    மனதினில் உருவாகுமோர்
    மகிழ்ச்சி ஊற்று ! - அது
    இதழின் ஓரத்தில்
    கொண்டு வருமே
    அழகானதோர் புன்னகை கீற்று !!!//எப்போதுமே மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  8. அருமையான நினைவலைகள்! வாழ்த்துக்கள்! (அழகிய கன்றுக்குட்டியைக் குளிப்பாட்டும் அதை விட அழகிய இரண்டு தமிழ்க் குழந்தைகள் யார்?)

    ReplyDelete
  9. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. அந்தப் புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஐயா.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரா .
    சிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள் .leyout சென்று
    goole folowers இணையுங்கள் .
    மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
    நான் ஏற்கனவே தங்களது தளத்தில் இணைந்துள்ளேன் தோழி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...