Monday, September 14, 2015

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா

உள்ளத்து எண்ணங்கள்
கருவாகி உருவாகி
சிறு கிள்ளையென
பிறப்பெடுத்து
எம் வலைப்பூ எனும்
மஞ்சமதில் தவழ்ந்தாட
தத்தித் தவழும் கிள்ளையும்
மெல்ல எட்டெடுத்து நடக்க
முகமறியா பல அன்பு உறவுகள்
கரம் பற்றி வழிகாட்ட
அவர்தம் ஊக்கத்திலும்
உற்சாகத்திலும் வளர்ந்து
நம் எழுத்துகட்கும் கிடைக்குமோர்
அங்கீகாரம் - இதனால் கிடைக்குமே
உள்ளத்திற்கோர் உற்சாகம் !

உற்சாகமும் ஊக்கமும் ஊட்டமும் அளிக்கும் முகமறியா உறவுகளை நேரில் சந்திக்க விருப்பமா ?

வாருங்கள் ! வாருங்கள் !

நான்காவது வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு !

வருகின்ற அக்டோபர் 11ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, புதுக்கோட்டை ஆரோக்கியமாதா மக்கள் மன்றம். 



வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது.        இதோடு,

பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத்  தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்...  மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....

                   அப்ப நீங்க..?

பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர்விவரம் அறிய இங்கே வாருங்கள் –


--------------------------------------------------------------------------------------
 
மேற்கண்ட தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வளரும் கவிதை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து பகிரப்பட்டுள்ளது. 
 
 

9 comments :

  1. வாழ்த்துக்கள்,
    தங்கள் பகிர்வும் அருமை

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி....

    அனைத்து போட்டிகளிலும் தாங்கள் பங்கு பெற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. போட்டிகளில் நிச்சயம் கலந்து கொள்கிறேன்.

      Delete
  4. சந்திப்பு சிறப்புற எனது வாழ்த்துகளும்....

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...