Sunday, January 8, 2012

வார்த்தையிலிருந்து கவிதை வடி-19(பித்து ,காகம் ,மணல் )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-19
வார்த்தைகள்:பித்து ,காகம் ,மணல் 

காகம் என்றோ மணல்வெளியில்
தவறவிட்ட வேப்பங்கொட்டை
இன்று விருட்சமாய்.....
எத்தனையோ பேருக்கு
உபயோகமாய் !!!
பணப் பித்து தலைக்கேறி
அருமை மரங்களை
வெட்டி வீழ்த்தினால் - நாளை
அலைவோமே தூய்மையான
காற்றுக்கு - பித்தனாய் !!


http://www.eegarai.net/t75698p300-topic#709780

மணல் கொண்டு கட்டிய வீட்டில்
சொப்புச் சட்டி கொண்டு ஆக்கிய
முறுக்கு அதிரச சாப்பாட்டினை
கொத்த வந்த காகத்தினை
விரட்டினோம் - அன்று !!!
ஒரு கைப்பிடி சோறுதனில்
ஒரு பருக்கையேனும் வந்து
எடுத்திடாதோ காகம் என-
பித்துப் பிடித்தவராய் -
நாமும் தான்
கா....கா..... என்று
காகமாய் மாறி
கரைகிறோம் - இன்று !!!
http://www.eegarai.net/t75698p315-topic

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...