Sunday, January 15, 2012

இந்தக் காதல் எது வரை??

சலனமின்றி அமைதியாய்
நதியென நகரும் வாழ்வதில்
காதல் வந்து விழுந்தது -
சிறு கல்லாய் !!!
அதிர்ந்த நீரலையாய்
மனதும் சலனமுற
பிறந்தது பித்து -
காதல் பித்து !!!
எதிர்பார்ப்பு விதையை
தூவி விட்டு
நாளும் வளர்க்கிறார்
காதல் கொடியதனை
வார்த்தை நீரூற்றி
கண்ணும் கருத்துமாய் .
நட்பெனும் நம்பிக்கை
உரத்தையும் அவ்வப்போது
தூவி விடுகிறார்……..
நட்பா காதலா எண்றெண்ணி
புலம்பித் துடிக்குது
பேதை மனம் ..
நட்பும் காதலும் என்ன
கடையில் வாங்கும்
உப்பும் சர்க்கரையுமா ?
காதல் உப்பாய்க்
கரிக்கிறதென்று கூறி
அதற்கு முலாம் பூசி
நட்பாக்க முனைய வேண்டாம் !!!
எதுவரை செல்லும் இந்த
நட்பு முலாம் பூசிய காதல் ???

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...