Sunday, January 15, 2012

நிலமகள் நோதல் இன்றி....

நிலமகள் - உலகிற்கே
படியளக்கும் குலமகள் !!
உண்ண உணவு - உடுக்க
உடை - இருப்பிடமளித்து
மனித குலமதை காப்பவள் !!!
அவளது மடிதனில் தவழும்
பிள்ளைகள் தாம் நாமனைவரும்.....
பிள்ளையே அன்னையை
நோகச் செய்தல் முறையோ ???
நிலத்தோடு உறவாடி நிற்கும்
மரங்களை வெட்டி வீழ்த்துகிறோம் -
நிலத்தடி நீரினை வற்றச் செய்கிறோம் !!
இரசாயன உரம் கொண்டு
மண்ணையே மலடாகுகிரோம் !!
பிளாஸ்டிக் கொண்டு
அவளின் மூச்சினயே அடக்கி
செயலற்றவளாக்கி விடுகிறோம் !!!
இதனால் ஏற்படும் விளைவுகள் -
எதிர்கொள்ளப் போவது யார்??
நாம் தானே !!!
சற்று சிந்திப்போம் .....
நிலமகள் நோதலின்றி வாழ
வழிவகை செய்திடுவோம் !!!
மண்ணின் வளம் காப்போம்.......
மாந்தரின் நலம் பேணுவோம்!!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...