Friday, March 15, 2013

பிள்ளை உள்ளம்


                                              

பிள்ளை உள்ளம்

கம்பிகளுக்குப் பின்
கிள்ளையும் சிறையிருப்பது
ஏனோ ? இரக்கத்துடன்
வினவுகிறது பிள்ளை உள்ளம் !!
நெல்லுக்கும் பழத்திற்கும்
தன் சுதந்திர வாழ்வுதனை
பறிகொடுத்து சிறைப்பட்டு
அதிர்ஷ்டத்தை ஊருக்கே சொல்லும்
கிள்ளை அதிர்ஷ்டக் காற்று
கடற்கரையிலேனும்
தன் பக்கம் வீசாதா ? என்றொரு
நப்பாசையில் கீச்சிட்டு
துள்ளித் துடித்துக் கொண்டிருக்கிறது
கூட்டினுள் !!!

http://www.muthukamalam.com/verse/p1157.html

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...