Monday, April 14, 2014

பிள்ளைக் கனியமுதே - 3


காணும்  புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலையமானதே ! 

புத்தகங்களை எல்லாம்
நீயே கிழித்து விட்ட போதும்
அவற்றை ஒருங்கிணைத்து நீ
ஓர் நாளும்  படிக்க மறந்ததிலையே !

நீ  எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எனக்கு
பொக்கிஷமானதே !

குளிர்சாதனப் பெட்டி
சுவர் - தொலைக்காட்சி கணினி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !

நீ உதிர்க்கும்  வார்த்தைகளுக்கு
பொருள் விளங்காது போயினும்
என் இதய பேழையில்
பொக்கிஷமென பாதுகாக்கிறேன் !

என் செல்லக் கண்மணியே !


பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2

8 comments :

  1. மட்டற்ற மகிழ்வினை அள்ளிக் கொடுக்க இவர்களை விட இறைவனாலும் முடியாது !குழந்தை நிலவின் மறு பிறப்பு .என்றென்றும் இந்த மழலைகள் மகிழ்ந்திருக்க வாழ்த்தி வணங்குவோம் .அருமையான படைப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  2. இனிமையான வரிகள் மனதை பரவசப்படுத்தியது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. மிகவும் அருமையான உணர்வுகளைச் சொல்லும் அருமையான கவிதை

    ReplyDelete
  4. Replies
    1. மிக்க நன்றி நண்பரே !

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...