Thursday, May 29, 2014

அன்னை



ஈரைந்து மாதங்கள்
கருவினில் உயிர் தாங்கி
கிள்ளையின் முதல்
அழுகுரல் கேட்டதும்
பெரிதும் உவந்த அன்னையவள்
வாய் வார்த்தைகளெல்லாம்
தொண்டைக்குழி விட்டு
வெளியேற போராட
ஓராயிரம் வார்த்தைகள்
மடைதிறந்த வெள்ளமாய் -
கண்களின் வழியாக !




அடி வயிற்றில்
எட்டி உதைத்து
சுகமான வலி தந்த
பட்டு ரோஜா
பாதங்கள் நொந்திருக்குமோ
என்றெண்ணியே
அன்னையவள் மெல்ல
தன் உதடுகளால்
ஒற்றித் தருகிறாள்
சுகமான ஒற்றடம் ! 




தளர்ந்த புன்னகையுடன்
அன்னையவள் கிள்ளை
முகம் பார்த்து சிரிக்க
உறக்கத்திலும் - தன்
உதட்டோரம் சிறு
கீற்றாய்  புன்னகை
உதிர்த்து விட்டு
அன்னையின் அணைப்பில்
அயர்ந்துறங்கிப் போகிறது
சிறு கிள்ளை !

8 comments :

  1. அழகான படைப்பு

    ReplyDelete
  2. அழகான கவிதை.... அன்னையைப் போலவே....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே.

      Delete
  3. http://ilaiyabharatham.blogspot.in/2014/06/blog-post.html

    This blog content link in Short story contest Details

    ReplyDelete
    Replies
    1. Thank you for sharing the details about the different contests in your blog.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...