Thursday, March 3, 2016

பயணம்







ஆர்ப்பரிக்கும் கடலென அலைமோதும்
ஆயிரமாயிரம் சொல்லடிகள் !
உள்ளம் கிழித்து அதன் அடியாழம் வரை
பிளந்தாய்வு செய்யும் மனிதர்கள் !
தகிக்கும் நெருப்பில் வாடினாலும்
புடம் போட்ட தங்கம் போல் புன்னகையை
முகம் தனில் தவழ விட்டு - மகிழ்ச்சியினை
ஒளிவெள்ளமென பரப்பிடும் அழகு உள்ளங்கள் !
பிறருக்காக வாழும் வாழ்வு - சமயத்தில்
சோர்வடையச் செய்தாலும் - உதவும் உள்ளம்
ஒவ்வொரு முறையும் மரணிக்கும்
 உணர்வுகளை உயிர்ப்புடன் வைக்கிறது !
கல்லும் முள்ளும் காடும் மேடுமான பாதைகள்
சூமூகமாகும் எனும் அசைக்கமுடியா நம்பிக்கை
உலகில் வாழ்வுதனை இட்டுச் செல்கிறது !
கடலின் மடிதனில் உறங்கச் செல்லும்  சூரியன்
விடியலின் பொழுதில் வானை அலங்கரிக்க
செம்பட்டு சூடி ஒளி வெள்ளத்தின் மத்தியில்
நடுநாயகமாய் வானில் உலா வந்திடும் நம்பிக்கையில்
நாளும் தொடர்கிறது - உயிர்களின் பயணம் !


 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...