Sunday, March 31, 2013

நற்றுணை




தனிமையில் துணையென  வந்தாய்
என் மனதை இறுக பற்றிக் கொண்டாய்  !!!
உன்னுள் கட்டுண்டேன் நானும்
உலகையே மறக்கச் செய்தாய்  !!!

அமைதியாய் தான் இருந்தாய் நீ -
ஆனால் என் மனதில் தான்
நீயும் ஏற்படுத்தினாய்
ஆயிரமாயிரம் சலசலப்பு !!!

என் கைகளுள் நீ
தஞ்சமடையும் வரை
அறியவில்லை - என்னை
இந்த அளவு வசீகரிப்பாயென்று !!!

என்னை விட்டு இம்மியும்
நீ  நகர்ந்ததுமில்லை !!-என்னை
நகர விட்டதுமில்லை !!!
கவசமாய்   உடனிருந்தாய் !!!

ஓர் நாளும் என்னை
நீ வஞ்சித்ததும் இல்லை !!
வஞ்சனை என்ற சொல்லை
நீ அறிந்திருக்கவுமில்லை !!!

உன்னைப் போல் உற்ற துணையை
நான் கண்டதுமில்லை !
இனி காணப்போவதுமில்லை !!
நற்றுணையான  புத்தகமே !!!

http://eluthu.com/kavithai/117865.html 

4 comments :

  1. அருமை, சிறப்பான சிந்தனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி !!!

      Delete
  2. எப்போதும் இத்துணை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...