Friday, March 22, 2013

இன்னும் இருக்கிறது ஆகாயம்





உள்ளம் துவண்டு
கண்கள் சோர்ந்து
நம்பிக்கை விளக்கும்
மங்கிய நொடிதனில்
வாழ்வும் தள்ளாடியதாய்
எண்ணுகையில்
சட்டென்று இடியோசை கேட்டு
தலை தூக்கிப் பார்த்தேன் –
எதிர்பாரா நொடியில்
இச்சென்று நெற்றிதனில்
முத்தமிட்டு – உள்ளமெங்கும்
புத்துணர்வு பரப்பி
உயிர்வரை எதிரொலிக்க
உரக்க உரைத்தது
மழைத்துளி  
இன்னும் இருக்கிறது ஆகாயமென்று !!!!

6 comments :

  1. அருமை... எண்ணங்களை மழையாகப்பொழியும் முகிலுக்கு வந்தனங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி...

      Delete
  2. அருமையான கற்பனை
    அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...