Tuesday, March 26, 2013

விழிகளில் இறைவன்





அகல விரிந்த
விழியிரண்டில்
என்ன தேடலோ ??
அன்னை வாங்கி
வைத்திருக்கும்
இனிப்பு பண்டத்திற்கான
எதிர்பார்ப்போ ? - அன்றி
தந்தை வாங்கி வருவதாய் சொன்ன
புத்தம் புது பொம்மைகட்கான
தேடலோ ?? - இல்லை
தொலைக்காட்சியில் வரும்
பொம்மைப் படங்களின்
ஈர்ப்போ  ?? - எதுவாயினும் சரி !!!
கண்மணியே !!!
உந்தன் அழகு கொஞ்சும்
விழிகளின் வழியே
இறைவனும் தெரிகிறான் !!!
அறியாமை பொங்கும்
எழில் முகத்தில்
இன்பமும் நிழலாடுகிறது !!!
துன்பமே அறியா
பிள்ளைப் பருவம்
மீண்டும் வாராதோ எனும்
ஏக்கமும் எம் மனதில்
குடிகொண்டு விட்டதே ???



http://www.kavithaiprem.in/2013/03/kavithai-ulaa-march-16-2013.html

2 comments :

  1. வராது தான் அக்காலம் திரும்ப ..

    ReplyDelete
    Replies
    1. கருத்தளித்தமைக்கு நன்றிகள் பல.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...