Wednesday, May 1, 2013

வசந்தமே !!! வருகவே !!!







வசந்தத்தை வரவேற்க - இங்கு
மரங்களே மலர்ச் செண்டுகளாய்
மனம் கொள்ளை கொள்ளும்
எழில் பிம்பங்களாய்
உருமாறி விட்டிருக்கின்றன !!!

இத்தனை காலம் உறக்கத்தில்
ஆழ்ந்திருந்த கதிரவனவனுக்கு
பூமிதனில் மலர்மாரி பொழிந்து
வண்ணமயமான வரவேற்பளிக்கிறாள்
இயற்கை அன்னை !!!

விறைத்திடும் குளிருக்கு பயந்து
உறக்கத்திலேயே காலம் கழித்து வந்த
புள்ளினங்கட்கும் துறுதுறுப்பான துள்ளியோடும்
அணில் முயல் என்றனைத்து உயிர்கட்கும்
வசந்தத்தின் வரவை தம் வாசனையால்
உணர்த்துகின்றன மதுமலர்கள் !!!

உலகையே வண்ணமயமாக்கி
உற்சாகத்தை ஊருக்கெல்லாம் ஊட்டிவிட்டு
உவகையை தரணிதனில் தவழச்செய்து
உன்மத்தத்தில் உலகை உழலச் செய்து 
உள்ளங்களில் உயர்வினை ஏற்படுத்தி 
உன்னத வாழ்வை உலகுக்களிக்குது - வசந்த காலம் !!!
http://tamilnanbargal.com/node/50341 

2 comments :

  1. Vetha. Elangathilakam 5 May 2013 -
    tamizhmuhil.blogspot.com - Public via Google Plus
    உன்னத வாழ்வை உலகுக்களிக்குது - வசந்த காலம் !!!
    sure....now it is.....
    Vetha.Elangathilkam

    ReplyDelete
  2. Tamizh muhil Pragasam5 May 2013 Edit
    தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும்
    மனமார்ந்த நன்றிகள் கவியே !!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...