Wednesday, May 15, 2013

இவர்கள் யாரோ ?




ஒரே உதிரத்தில்
உதித்து வந்த
பாச மலர்களோ ?
அன்றில்
ஆபத்தில் ஒருவரிடம்
மற்றவர் தஞ்சம்
தேடிய நட்புறவுகளோ ?
அல்லது
அறிமுகமே இல்லாத
அன்பு உள்ளங்களின்
ஆழ் உறக்கத்திற்கு
அன்னை மடியென
ஒருவருக்கு மற்றவர்
ஆகிப் போனார்களோ ?
எது எப்படியாயினும்
மனித வாழ்வின்
அனைத்து நிலைகளிலும்
உறவுகளே நம் வாழ்வின்
ஆதாரங்கள் ஆகிவிடுகின்றன !!
இது நிதர்சனமான உண்மையன்றோ ???



No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...