Wednesday, May 1, 2013

மிருகமான மனிதன் !!!


நாகரிகம் அறியாதவரை
இயற்கையையே நாடினான்
மிருகங்களை துணையாகக் கொண்டான்
இயற்கையே கதியென்றிருந்தான் !!
அன்பினை அறிந்தான் !!
அன்பால் உலகை அழகாக்கினான் !!
பரிணாம வளர்ச்சியில் 
பலவற்றை அறிந்தான்   
மிருகங்களை அடிமையாக்கினான்
இயற்கையினை  உருமாற்றினான் !!
செயற்கையை நாடினான் !!
உலகையே கைக்கொள்ள  எண்ணினான் 
தான் உருவாக்கிய உறவுகளை 
தானே மறந்து அலைந்தான் !!
இதயத்தை பூட்டிட்டு 
அடைத்திட்டான் - சுயநலத்தை 
ஆடையென கொண்டுவிட்டான் !!
மனிதன் மீண்டும் மிருகமாகிவிட்டான் !!!


1 comment :


  1. Dindigul Dhanabalan commented on your blog post
    படமும் பலவற்றை சிந்திக்க வைக்கின்றன...
    மிருகமான மனிதன் !!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...