Friday, June 21, 2013

என் தோழிக்கு !!!







காலமது நம்மைப் பிரித்து வைத்து
கண்ணாமூச்சி காட்டி விளையாடுகிறது !
கண்களில் நம் பிம்பம் தனை நிறைத்து
கனவினில்  நினைவுகளை நிரப்பி
கண்காணாத தூரத்தில் எனக்காய் - நட்புடன்
காத்துக் கிடக்கும் என் கண்மணியே !!!
கவலை கொள்ளாதே !
கடிது வந்திடுவேன் நானே !! - உன்னைக்
காணும் நாளுக்காய்  தான்
காத்துக் கிடக்கிறேன் நானும் !!
காலம் காலமாய் - உந்தன்
கள்ளமில்லா நட்பினை
கண்களில் சுமந்தபடி !!!

30 comments :

  1. நம்பிக்கையுடன் வரிகள் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. @ திண்டுக்கல் தனபாலன்

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஐயா !!

      Delete
  2. சீக்கரமே உங்கள் தோழியுடன் சேர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. விரைவில் தோழியைக் கண்டு கதை பேசி மகிழ வாழ்த்துகள்!
    அருமையான கவிதை தமிழ்முகில்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  5. அருமையான வரிகள்

    ReplyDelete
  6. நம்பிக்கையுடன் தொடருங்கள்...

    நிச்சயம் தோழியை சந்திப்பீர்கள்!!! வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஊக்கம் தரும் வார்த்தைகட்கும், வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  7. தோழியைத்தேடி தீட்டிய கவியதில்
    வாழும் உமதன்பு வழியக் கண்டேன்
    நாளும் கிட்டும் நினைப்பது நிகழும்
    சூழும் மகிழ்வு சேர்ந்தே!.

    கிட்டட்டும் அனைத்தும்! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான நல்வார்த்தைகட்கும், நல்வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  8. நட்பை சுமப்ப்பது மனம் கொள்ளா மகிழ்ச்சி.அதில் இருக்கிற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்கிறதே,ஏய் யப்பா அந்தக்கணங்கள் ,,,,,,,நட்பை சுமந்தபடி நகரட்டுமே நாட்கள் இப்பொழுது என்ன?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா . நட்பு என்றுமே மனதில் இனிமையான மகிழ்ச்சியான நினைவுகளையே நிழலாடச் செய்யும்.
      தங்களது வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா .

      Delete
  9. எண்ணம் இனிது நிறைவேறட்டும்.
    இனிய இறைவன் அருளட்டும்.
    அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete
  10. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html

    இன்று வலைச்சரத்தில் தங்கள் அறிமுகம் . நேரம்இருப்பின் வருகை தரவும்.

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  11. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் தமிழ்முகில்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி .

      Delete
  12. காத்திருக்கும் நட்புக்கு ஒரு கவிதை!
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி .

      Delete
  13. வலைசர அறிமுகத்தில் இன்று நீங்கள்!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி .....

      Delete
  14. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...