Thursday, April 9, 2015

நீயே எந்தன் வாழ்க்கையே !




பட்டுப் பாதமும்  தான்
புண்ணாகிப் போகக் கூடாதுன்னு
பொன்னான என் பிள்ளையே
தோளில் தூக்கிச் செல்கிறேன் உன்னையே !

கூட்டத்திலே நீயும் தான்
ஓடியே - என்னை தவிக்க விட்டு
நீயும் தவித்தழுகாது இருக்கவே
தோளில் தூக்கிச் செல்கிறேன் உன்னையே !

புதிதாய் பலவும் பார்த்ததும்
ஆர்வமும் ஆவலும் மேலோங்க
அறியா ஆபத்திலேதும் நீயும் 
சிக்காது காக்கவே - துணையாகிறேன் நானுமே !

கண் அகல காண்பன அனைத்தையும்
நீ இரசித்து இன்பம் காண
உன்னை சுமந்து சுற்றுவதிலேயே
இன்பம் காண்கிறேன் நானுமே !

உன் பிறப்பாலேயே நானும்
தந்தையென பிறப்பெடுத்தேன் !
புது வாழ்வு காண்பித்த பிள்ளையே
நீயே எந்நாளும் எந்தன் வாழ்க்கையே !


4 comments :

  1. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...