விழிகளின் ஓரம்
ஏனிந்த கார்காலம்?
சோக மேகங்கள்
சூழ்ந்திட்டதாலா?? அன்றி
ஆனந்த அருவி
பெருக்கிட்டதாலா??
ஏனிந்த கார்காலம்?
சோக மேகங்கள்
சூழ்ந்திட்டதாலா?? அன்றி
ஆனந்த அருவி
பெருக்கிட்டதாலா??
நொடிப்பொழுதில்
முத்துக்களென சிதறும்
நீர்த்திவலைகள்....
கண்கள் படம்பிடிப்பதற்க்குள்
நிழற்படமாய் மனமும் கையும்
படம்பிடித்து விட்டனவே !!!
முத்துக்களென சிதறும்
நீர்த்திவலைகள்....
கண்கள் படம்பிடிப்பதற்க்குள்
நிழற்படமாய் மனமும் கையும்
படம்பிடித்து விட்டனவே !!!

சில்வண்டே......என்ன சிந்தனையோ??
சிவ்வென்று காற்றைக் கிழித்து
பறக்க எத்தனிக்கிறாயோ?? அன்றி
இரையதை தேடி...மலரின் விளிம்பதில்
தவமிருக்கிறாயோ??

தாயின் அரவணைப்பதில் தான்
வாழ்ந்திட்டால் - கடந்திடலாமே
எத்துனை தடைகளையும் எளிதாக!!!
அவளது அன்பின் கதகதப்பில்
தட்டிடலாமே வெற்றிவானின்
கதவுகளை நம்பிக்"கை" கொண்டு!!
வாழ்வின் ஒவ்வொரு நாளும்
மலர்கிறது - புத்தம் புதிய
விடியலோடு.....
வரவேற்போம் வசந்தமான
நாட்களை - நம்பிக்கை
மலர்களோடு!!!
மலர்கிறது - புத்தம் புதிய
விடியலோடு.....
வரவேற்போம் வசந்தமான
நாட்களை - நம்பிக்கை
மலர்களோடு!!!
No comments :
Post a Comment