Monday, May 27, 2013

தவம் தந்த வரம்


அன்பு  உள்ளங்கள் உன்
ஆசை முகம் கண்டால்
இன்பத்தில் திளைத்திங்கே
ஈந்திடுவர்   முத்த மழையே -
உந்தன்  பிஞ்சுக் கண்ணத்திலே !!
ஊறிடும் நாவதன் அசைவினில்
எச்சிலுடன் முதல் சொற்களும் பிறக்க
ஏட்டினில்  பொறித்து வைத்தேன் - அவற்றை
ஐசுவரியமாய் நெஞ்சில் காத்து  வைத்தேன் !!!
ஒயிலாக நீ  அமர்வதும்
ஓடியாடி  துள்ளித் திரிவதும்
ஒளவி நீயும் தட்டி கொட்டி உண்ணும்

அழகைக் காண
கிடந்தேன் தவம் !!
பெற்றேன் வாழ்வில்
உயர் வரம் !!
நலமாய் வளமாய்
நீயும் வாழ இறைவனிடம்
இறைஞ்சுவேன் -
கோடி தரம் !!

பி.கு. ஒளவி - வாயால் பற்றி

4 comments :

  1. அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. செல்லக் குழந்தையின் சிந்திய உமிழ் நீரும்
    அமுதம் எனக் கண்ட தங்கள் உள்ளம் வாழ்த்த
    ஒளவியின் வாழ்வும் சிறக்க வாழ்த்துக்கள் இங்கே உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...