Monday, April 1, 2013

நல்ல உள்ளங்களின் உடமைகள்!



 




உறவுகள்  உணர்வுகள்
இவையெல்லாம் வெறும்
வார்த்தைகள் என்ற
நிலையாகி காலங்கள்
பல கடந்துவிட்டன !!!
இதயப் பூர்வமான
அன்பு என்பதெலாம் 
அவசர உலகிலெதற்கென்று
இறக்கை கட்டிக்கொண்டு
பறக்கின்றன பல உறவுகள் !!!
காலடியில்  மிதிபட்டாலும்
காலமெலாம் உந்தன்
நலமான  வாழ்விற்காய்  
துடித்துக் கொண்டே
இருப்பேனென சில நல்லுள்ளங்கள் !!!
காயங்களும் கண்ணீரும்
சோகங்களும் சோர்வும்
காலங்காலமாய் 
நல்லிதயங்கட்கு மட்டும்
பாத்யதை என்றானதும் ஏனோ ???

http://www.muthukamalam.com/verse/p1167.html 


No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...