Monday, March 23, 2015

காதல் சுவர்கம்




கருத்தொருமித்து
காதலால் கட்டுண்டு
சூழ்ந்திருக்கும் உலகம்
தனை மறந்து
தமக்கே தமக்கான
புதியதோர் சுவர்க்கம்
சிருஷ்டித்து - ஆங்கே
ஒருவரை ஒருவருள்
தொலைத்து -
ஈருடல் ஓருயிரான
நிலையில் இங்கே
கற்சிலையாய் சமைந்தனரோ ?
காதலில் உயரப் பறந்தனரோ ? -
மெல்ல கேசம் வருடும்
மேகக் காதலனின் காதில்
கிசுகிசுக்கிறாளோ -
மரகதப் பட்டுடுத்திய
மலை மங்கை ?

http://www.vallamai.com/?p=55640

2 comments :

  1. //மரகதப் பட்டுடுத்திய மலை மங்கை ? //

    அழகான கற்பனையுடன் அசத்தலான வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...