Wednesday, May 15, 2013

காடுகள் மலைகள் இறைவன் கலைகள் !!!




இறைவனின் கைவண்ணத்தில்
எழிலான கலைப் பொக்கிஷமென
அழகு சிற்பமென - இயற்கை !!!
அணு அணுவாய் இரசித்து
ஆக்கியளித்த  சிற்பி
மலை மகளுக்கு
மேகங்கள் கொண்டு
அழகிய  கிரீடமணிவித்து
நீர்வீழ்ச்சியால் வெள்ளி
சரிகை  பட்டுடுத்தி
சலசலக்கும்  நீரோடை   தன்னை
வனிதையவளுக்கு கொஞ்சும்
சலங்கைகளாக்கி - வானுயர்ந்த
நீள் மரங்கள் எல்லாம்
மங்கையவள்  கூந்தலாக
வெண்ணிலவும் கதிரவனும்
அவள் கூந்தலில் அசைந்தாடும்
மல்லிகை கனகாம்பரம் என்றாக
இவற்றை ஆக்கியளித்த
இறைவன் - ஈடிணையில்லா
கலைஞன் அன்றோ !!!






2 comments :

  1. ''..இறைவன் - ஈடிணையில்லா
    கலைஞன் அன்றோ !!!..''
    நல்ல வருணனை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...