Monday, May 27, 2013

பெற்றோர்






 

தட்டுத் தடுமாறி மெல்ல
எட்டு எடுத்து வைக்கையிலே
பட்டுக் கரம் தா என்
கட்டித் தங்கமே என்றேந்தி
எட்டி வைக்கும் அடிகளுக்கெல்லாம்
தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி
எட்டுத் திக்கு சென்றாலும்
கட்டி ஆள்வாய் உலகையே
நாட்டிடுவாய் வெற்றிக் கொடியையே !!!
என்று
உற்சாகமூட்டும் அன்னை தந்தை
உற்ற துணையாய் இருக்கையிலே
உன்னத நம்பிக்கை  மலையென
உள்ளமதில் எழுந்து நிற்க
உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

http://www.vallamai.com/?p=35593

6 comments :

  1. அருமை...

    உன்னத நம்பிக்கையோடு தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  2. பெற்றோர்களே நாம் போற்ற வேண்டிய தெய்வங்கள் .அருமையாகச்
    சொன்னீர்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...