Sunday, April 21, 2013

புகை நமக்குப் பகை





புகை  -  இழுக்க  இழுக்க  இறுதிவரை
இன்பம்  தான் !!! -  அதுவே
புகை  இழுப்பவரின்   வாழ்வினை
இழுத்து விட்டால் ???

பற்ற வைக்கும்  ஒவ்வோர்
சிகரெட்டும் – சுற்றியிருக்கும்
ஒவ்வோர்   உற்றவருக்கும் -
உயிருடன்   வைக்கும்  நெருப்பு !!!

புகையிலையின்   துணை   நாடினால்
பொசுக்கி விடுமே  நெஞ்சுக் கூடு  தனையும்  !!!
புகையின்  பகை  அறிந்தால்  -  காத்திடலாம்
பொன்னான   வாழ்வுகளை   புவனத்திலே !!!


http://eluthu.com/kavithai/117870.html

6 comments :

  1. /// ஒவ்வோர் உற்றவருக்கும் -
    உயிருடன் வைக்கும் நெருப்பு !!! ///

    உண்மை வரிகள்... அவரவர் உணர வேண்டிய வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  2. நல்ல கருத்துக்கவிதை.
    பகையை எப்படி உறவாகக் கொள்கின்றனர்... அதுதான் விந்தை...:)

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி !!

      Delete
  3. முகில் கருத்திடும் வகையை மாற்றுங்கள் இவ்வளவு நாள் வருவேன் படிப்பேன் கருத் திட நினைக்கும் போது அது எனக்கு சோதனையை மறுக்கும் நீங்கள் ஏன் இப்படி வைத்து இருக்கறீர்கள் இன்று வழிவிட்டது உங்கள் கவிதைகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. சில சமயம் மட்டும் comment moderation வருமாறு அமைத்திருந்தேன்.அதில் ஏதேனும் பிரச்சனை ஆகி இருக்கும் என்றெண்ணுகிறேன்.இப்போது மாற்றி அமைத்து விட்டேன்.

      தங்களது மேலான ஆதரவிற்கும், அன்பான ஊக்குவிப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...