Monday, May 13, 2013

அன்னை


ஐயிரு திங்கள்
கர்ப்பத்தில் சுமந்து
காலமெல்லாம் நம்மை
தன் நெஞ்சினில் சுமந்து
நமக்காய் தன்  சுகம் மறந்து
தனது வாழ்வையே
நமக்காக வாழ்ந்து
தன் சின்னஞ்சிறு
ஆசைகளைக்  கூட
நமக்காய் அர்ப்பணித்து
கனவிலும் நினைவிலும்
தன் பிள்ளைகள் பற்றிய
சிந்தனைகளே வியாபித்திருக்க
தான் ஈன்ற பிள்ளைச் செல்வங்களின்
நல்வாழ்வன்றி வேறேதும்
வேண்டுதற்கறியேன் பராபரமே !!
இங்கனம் வேண்டும் தாய்
தியாகச் சுடரன்றோ ???
அவளது அன்பிலும் ஆசியிலும்
கிடைத்திடாதோ  நல்வாழ்வு ??

2 comments :

  1. பெருமை நிறை வரிகள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கவியே !!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...