Wednesday, May 15, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம்




ஊரு கண்ணு பட்டுப்போகுமுன்னு

பொத்திப் பொத்தி நான் வளத்த

பொன்னு இரத்தினத்த – மனசு

கேக்காம தேத்திட்டு

குடும்ப கஷ்டத்துக்குன்னு

வேலைக்கு அனுப்ப

அங்க படுபாவிப்பய கண்ணுல

அதட்டலுக்கே அரண்டு போற

அனிச்சம்பூ – எம்மவளும்

பட்டு வைக்க – காதலுன்னு

கதையளந்து கழுகா

சுத்திவந்து சந்தர்ப்பத்துக்கு

காத்து நிக்க – சுதாரிச்சு

சூதானமா இருந்த புள்ள

ஒதுங்கி ஒதுங்கித்தாம் போக

ஆசப்பட்டது கிடைக்கலயேன்னு

ஆத்திரத்துல – அனிச்சம்பூமவள

அமிலத்துல நனைச்சு - தூக்கி

வீசி எறிஞ்சிட்டாம் பாவி !!!

துடிதுடிச்சுத் தாம் பட்டுப் போச்சு

அமிலத்துல ஆடின அனிச்சமாச்சு !!!

பெத்தவங்களயும் இங்க - நடை

பொணமாத்தான் ஆக்கிப் போச்சு !!!

2 comments :

  1. Jayachandran Govindarajulu via facebook

    nice !

    10 hours ago

    ReplyDelete
  2. Manoj Kumar via facebook

    a good one..

    2 hours ago

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...