Thursday, March 28, 2013

ஆசான்

அன்னையும் பிதாவும்
கொடுத்த அறிவினை
சுடர் விட்டெரிய செய்யும்
தூண்டுகோல் !!!

கண்டிக்கும் வேளையில்
சற்று கரடு முரடு தான்
கற்றுத் தரும்
ஆசான்கள் எப்போதும் !!!

அவர்தம் உள்ளந்தனில்
மாணாக்கரின் நினைவுகள்
என்றென்றும் - நினைத்தாலே
இனிக்கும் கற்கண்டுகள் !!!

கற்ற கல்வியையும் -பெற்ற
அனுபவத்தையும் நாளும்
போதனை மூலம் உலகிற்கு
பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!

அன்றாடம் கற்பித்தலின் மூலம் 
தானும் கற்றுக் கொண்டே 
இருக்கும் வளர்ந்து விட்ட
பிள்ளைகள் -ஆசான்கள்!!

http://www.vallamai.com/?p=33998 

2 comments :

  1. முடிவில் உள்ள வரிகள் சிறப்பு... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...